தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்
First Published : 30 Jul 2010 12:51:58 PM IST
Last Updated :
தருமபுரி, ஜூலை 29: கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு தீர்மானத்தின் அடிப்படையில் தமிழை ஆட்சி மொழியாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி எம்பி இரா. தாமரைச்செல்வன் அண்மையில் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழை இந்தியாவின் ஆட்சிமொழியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். சம்ஸ்கிருத மொழி மேம்பாட்டுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வது போல தமிழ் மொழி வளர்ச்சிக்கும் ஒதுக்க வேண்டும்.சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதன் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேசிய அளவில் அமைக்கப்படவுள்ள கல்வெட்டு ஆராய்ச்சி மையத்தை சென்னையில் அமைக்க வேண்டும் என மக்களவையில் பேசியதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.