குதிரையேற்ற சம்மேளனத் தேர்தல்: பல்லம் ராஜூ விலகல்
First Published : 30 Jul 2010 12:00:00 AM IST
Last Updated :
புது தில்லி, ஜூலை 29: குதிரையேற்ற சம்மேளன தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில் இருந்து விலகினார் மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பல்லம் ராஜு. இந்திய குதிரையேற்ற சம்மேளனத்துக்கு 31-ம் தேதி நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மத்திய இணை அமைச்சர் பல்லம் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்தார். இதை அடுத்து முன்னாள் ஹாக்கி வீரர் பர்கத் சிங் தலைமையில் பல்வேறு விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியல்வாதிகள் விளையாட்டு சம்மேளனங்களில் பதவி வகிக்க கூடாது என அவர்கள் கூறினர். இதை அடுத்து பல்லம் ராஜு போட்டியில் இருந்து விலகினார். அவர் விலகி இருப்பது விளையாட்டு சம்மேளனங்களில் அரசியல்வாதிகள் தலையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் தங்கள் குழுவுக்கு கிடைத்த முதல் வெற்றி என பர்கத் சிங் கூறியுள்ளார்.