Friday, September 03, 2010 1:42 PM IST
Click
தமிழகம்
சுயநிதி எம்.பி.பி.எஸ்.: அனைத்து அரசு இடங்களும் நிரம்பின

First Published : 29 Jul 2010 12:00:00 AM IST


 சென்னை, ஜூலை 28: தமிழகத்தில் உள்ள ஏழு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அனைத்து 542 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டன.

  சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் கடந்த ஜூலை 23-ம் தேதி முதல் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்குக் கலந்தாய்வு நடைபெற்றது.

  மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி, கோவை பி.எஸ்.ஜி. உள்பட ஏழு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் 542 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்குக் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

÷நடப்புக் கல்வி ஆண்டில் (2010-11) புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சென்னை வண்டலூர் தாகூர் மருத்துவக் கல்லூரியில், முற்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவருக்கு ஒரு இடம், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு நான்கு இடங்கள் என மொத்தம் 5 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் மட்டும் நீதிமன்ற உத்தரவுப்படி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

நடப்புக் கல்வி ஆண்டில் (2010-11) தொடங்கப்பட்ட திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சேர்ந்த மாணவர்களுக்கு கடந்த ஜூலை 26-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கின. விழுப்புரம், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேர்ந்த மாணவர்களுக்கு வியாழக்கிழமை (ஜூலை 29) வகுப்புகள் தொடங்குகின்றன.

அரசு-சுயநிதி பி.டி.எஸ்.: சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள அனைத்து 85 பி.டி.எஸ். இடங்களும் நிரம்பிவிட்டன. சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில், 487 பி.டி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு வரும் 31-ம் தேதி வரை தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறுகிறது.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்