நேபாள பிரதமர் தேர்தலை விரைவுபடுத்த இந்தியா, அமெரிக்கா முயற்சி
First Published : 30 Jul 2010 05:51:30 AM IST
Last Updated :
காத்மாண்டு, ஜூலை 29: நேபாள அதிபர் தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து அந்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களுடன் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர்.÷நேபாளத்தில் முக்கியக் கட்சிகளான மாவோயிஸ்டு கட்சி மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்னையால் பிரதமர் தேர்தல் நடத்துவதிலும், புதிய அரசு அமைப்பதிலும் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதனால் அந்நாட்டில் அசாதாரண அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளது.÷இப்பிரச்னையைத் தீர்ப்பது குறித்து நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் ராகேஷ் சூட் பேச்சு நடத்தினார். இதேபோல மாவோயிஸ்டு தலைவரும், பிரதமர் பதவி வேட்பாளருமான பிரசன்டா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களுடன் அமெரிக்கத் தூதர் ஸ்கூட் எச்.டெலிஸி பேசினார்.