பாகிஸ்தானில் நிலச்சரிவு: 48 பேர் பலி
First Published : 31 Jul 2010 12:00:00 AM IST
Last Updated :
பெஷாவர், ஜூலை 30: பாகிஸ்தானின் வடமேற்கே உள்ள மலைப்பகுதி கிராமமான ஒலந்தாரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவினால் 48 பேர் பலியாயினர். கடந்த சில தினங்களாக பாகிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனிடையே கைபர்-பாக்துன்கவா மாகாணத்தின் ஷங்லா மாவட்டத்தில் உள்ள ஒலந்தார் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 48 பேர் பலியாயினர். மீட்புக் குழுவினர் இதுவரை 16 பேரின் உடலை மீட்டுள்ளனர். இம்மழைக்கு இதுவரை, பாகிஸ்தானில் 150-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஷங்லா மாவட்டதில் மட்டும் 100 பேர் பலியாகியுள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர், பெருமளவுக்கு பயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.