10-வது ஆண்டில் "கல்யாணமாலை'
First Published : 03 Oct 2009 11:01:03 PM IST
Last Updated :
சன் டி.வி.யில் ஞாயிறுதோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "கல்யாணமாலை' நிகழ்ச்சி, நேயர்களின் வரவேற்போடு 10-வது ஆண்டை எட்டியுள்ளது. இதற்காக சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கில் பிரமாண்டமான விழா நடைபெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) மாலை 5 மணிக்குத் தொடங்கும் இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன், சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன், பேராசிரியர் சாலமன் பாப்பையா, "கல்யாணமாலை' மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கிறார்கள்.
"கல்யாணமாலை' நிகழ்ச்சி மூலமாக இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இதுகுறித்த சுவாரஸ்யமான தொகுப்பும் இசையமைப்பாளர் கங்கை அமரன் தலைமையில் பிரபல பின்னணிப் பாடகர்கள் பாடி, பேசி கலக்கும் புதுமையான பட்டிமன்றமும் இந்த விழாவில் இடம்பெறுகின்றன. அனுமதி இலவசம்.