பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவத்தினர் இருவர் உள்பட 4 பேர் சாவு
First Published : 24 Sep 2009 01:26:00 AM IST
Last Updated :
ஸ்ரீநகர், செப். 23: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் ராணுவ மேஜரும், வீரர் ஒருவரும் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். வடக்கு காஷ்மீர் பத்திபோரா மாவட்டத்தின் எல்லையோர கிராமத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதனையடுத்து ராணுவ வீரர்களும், போலீஸôரும் அந்த வீட்டை சுற்றிவளைத்தனர். அப்போது பயங்கரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கிச் சண்டை புதன்கிழமை காலை வரை நீடித்தது. இதில் ராணுவ மேஜர் ஜே.எஸ். சூரியும், வீரர் ஒருவரும் உயிரிழந்தனர். 3 வீரர்கள் காயமடைந்தனர். பின்னர் அப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகளின் உடல்கள் மீட்கப்பட்டன.