சுமைத் தொழிலாளர்கள் ஸ்டிரைக்
First Published : 06 Oct 2009 11:56:00 PM IST
Last Updated :
HTML clipboard
கடலூர், அக். 5: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமைத் தூக்கும்
தொழிலாளர்களின் 2 நாள் வேலைநிறுத்தம் திங்கள்கிழமை கடலூர் மாவட்டத்தில் தொடங்கியது.
இதனால் ரேஷன் கடைகளுக்கு பொருள்கள் எடுத்துச் செல்வது பாதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்குகளில்
பணிபுரியும் சுமைத் தூக்கும் தொழிலாளர்கள் 300 பேர், திங்கள்கிழமை வேலைநிறுத்தம்
செய்தனர்.
அரசு ஊழியர்களுக்கான சலுகைகள், பணி நிரந்தரம், ஓய்வூதியம், ஊதிய உயர்வு என்பன
உள்ளிட்ட கோரிக்ககைகளுக்காக இந்த 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு
நுகர்பொருள் வாணிபக் கழக, அங்கன்வாடி மற்றும் பொதுத் தொழிலாளர்கள் சங்கம் அழைப்பு
விடுத்து இருந்தது.
கடலூர் மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்குகளில் இருந்து
நாளொன்றுக்கு 225 டன் ரேஷன் பொருள்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
அதேபோல் சேமிப்புக் கிடங்குகளுக்கு 225 டன் பொருள்கள் கொண்டு வரப்படுகின்றன.
சுமைத் தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ரேஷன் கடைகளுக்கு அரிசி,
சர்க்கரை, பாமாயில் பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருள்கள் எடுத்துச் செல்வது
பாதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் சத்துணவுக் கூடங்கள், அரசு விடுதிகள், மற்றும் போலீஸ் ரேஷனுக்கு
பொருள்கள் எடுத்துச் செல்ல முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது.
வேலைநிறுத்தம் செய்த சுமைத் தூக்கும் தொழிலாளர்கள் கடலூர் மாவட்டத் தலைமை
அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.