பிளாஸ்டிக் எதிர்ப்பு ஊர்வலம்
First Published : 11 Oct 2009 12:22:05 AM IST
Last Updated :
புதுச்சேரி, அக்.10: புதுச்சேரி என்.சி.சி. குழும மாணவர்களின் பிளாஸ்டிக் எதிர்ப்பு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி மாநில என்.சி.சி. கடற்படை, தரைப்படை சார்பில் பிளாஸ்டிக் எதிர்ப்பு ஊர்வலம் ராஜீவ் காந்தி சிலை சதுக்கம், இந்திரா காந்தி சிலை சதுக்கங்களில் இருந்து புறப்பட்டது. கல்வித்துறை இயக்குநர் எஸ்.சுந்தரவடிவேலு கொடியசைத்து ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கர்னல் தத் தலைமை வகித்தார். என்.சி.சி.அதிகாரிகள் ஆனந்த், அதிகாரி சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தில் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ராஜீவ் காந்தி சிலை, இந்திரா காந்தி சிலை சதுக்கங்களில் இருந்து 2 பிரிவுகளாக ஊர்வலம் புறப்பட்டது. ராஜீவ்காந்தி சிலையில் புறப்பட்ட ஊர்வலம் வள்ளலார் சாலை வழியாக காந்தி சிலையை அடைந்தது. இந்திரா காந்தி சிலையில் புறப்பட்ட ஊர்வலம் பேருந்து நிலையம், புஸ்ஸி வீதி வழியாக கடற்கரைச் சாலை காந்தி சிலையை வந்தடைந்தது. ஊர்வலத்தில் பிளாஸ்டிக் எதிர்ப்பு குறித்த பேனர்களை மாணவர்கள் ஏந்திச் சென்றனர். மக்களிடம் பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.