வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
First Published : 14 Nov 2009 02:17:42 AM IST
Last Updated :
முதுகுளத்தூர், நவ. 13: முதுகுளத்தூரில் கே.காசிலிங்கம் தலைமையிலான வழக்கறிஞர்கள் சங்க ஆலோசகர் கே.கோவிந்தசாமி தெரிவித்தது: முதுகுளத்தூர் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினரும், கடலாடி ஊராட்சி ஒன்றியத் தலைவருமான த.ராஜசேகர் மீது கடலாடி போலீஸôர் பொய் வழக்குப் பதிவு செய்திருப்பதைக் கண்டித்தும், வழக்கை வாபஸ் பெறக் கோரியும் முதுகுளத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நவ. 12 முதல் தொடர் வேலை நிறுத்தம் துவங்கினர். தற்போது ராஜசேகருக்கு மாவட்ட குற்றவியல் முதன்மை நீதி மன்றத்தில் முன்ஜாமீன் கிடைத்துள்ளது. இதையடுத்து, வேலைநிறுத்தம் நவம்பர் 14 முதல் வாபஸ் பெறப்படுகிறது என்றார்.