பொதிகை என்ஜின் பழுது: ரயில்கள் தாமதம்
First Published : 25 Oct 2009 04:14:34 AM IST
Last Updated :
25 Oct 2009 10:50:09 AM IST
திருநெல்வேலி, அக். 24: திருச்சி அருகே பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் பழுதடைந்ததையடுத்து, அனந்தபுரி, நெல்லை விரைவு ரயில்கள் 3 மணி நேரம் தாமதமாக சனிக்கிழமை திருநெல்வேலி வந்தன. சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு புறப்பட்ட பொதிகை விரைவு ரயில் திருச்சி அருகே வந்தபோது, என்ஜினில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக திருவனந்தபுரம் அனந்தபுரி விரைவு ரயில் சனிக்கிழமை காலை 7.10 மணிக்குப் பதிலாக 10 மணிக்கும், காலை 8.30 மணிக்கு வர வேண்டிய நெல்லை விரைவு ரயில் காலை 10.50 மணிக்கும் திருநெல்வேலி வந்தன.