கூடங்குளத்தில் கூடுதல் பாதுகாப்பு
First Published : 22 Nov 2009 01:01:40 AM IST
Last Updated :
வள்ளியூர், நவ. 21: கூடங்குளம் மகேந்திரகிரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மும்பை நகரத்தின் முக்கிய பகுதிகளான சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், விமான நிலையம், இந்திய நுழைவுவாயில் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அக் கடிதம் கன்னியாகுமரியில் இருந்து மும்பை ரயில் நிலைய அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள் ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, நாடு முழுவதும் முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில், கூடங்குளம் அணுமின் நிலையம், மகேந்திரகிரியில் உள்ள திரவ இயக்க திட்ட மையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.