மாவோயிஸ்டுகளை கண்டித்து சிஐடியூ தர்னா
First Published : 11 Sep 2009 04:33:00 AM IST
Last Updated :
வேலூர், செப். 10: மேற்கு வங்கத்தில் சிஐடியூ, மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தி வரும் திரிணாமுல் காங்கிரஸ், மாவோயிஸ்ட்களை கண்டித்து வேலூரில் சிஐடியூ சார்பில் தர்னா போராட்டம் நடைபெற்றது. வேலூர் தலைமை அஞ்சல் அலுவலகம் முன் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எம்.பி. ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் மாவட்டச் செயலர் டி.ஆர். புருஷோத்தமன் தர்னாவை தொடங்கி வைத்தார், மாவட்டச் செயலர் ஏ. நாராணன் முடித்துவைத்தார். இதில் சிஐடியூ மாவட்டச் செயலர் என். காசிநாதன், இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட அமைப்பாளர் வா. ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.