Friday, September 03, 2010 1:44 PM IST
Click
வேலூர்
வாக்களிக்க பணம் வாங்காதீர்: மக்கள் சக்தி கட்சி பிரசாரம்

First Published : 20 Mar 2010 01:22:10 AM IST


பென்னாகரம், மார்ச் 19: பென்னாகரம் தேர்தலில் வாக்களிப்பதற்கு பணம் வாங்காதீர்கள் என மக்கள் சக்தி கட்சியினர் பிரசாரம் செய்தனர்.

பென்னாகரம் நகரில் வெள்ளிக்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர்கள், விலை மதிப்பில்லா வாக்குரிமைக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டாம். இன்று வாக்களிக்க பணம் கொடுப்பவர்கள் நாளை லஞ்சப் பேர்வழிகளாகவே மாறுவார்கள்.லஞ்சம் இல்லாத வெளிப்படையான அரசு நிர்வாகம், லாபகரமான விவசாயம், மது, புகையிலை ஒழிப்பு, சாதிகள் அற்ற சமுதாயம், அனைவருக்கும் தரமான கல்வி மற்றும் மருத்துவம் ஆகியவை வழங்க மக்கள் சக்தி கட்சிக்கு வாக்களியுங்கள் என்று அவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் சிவ. இளங்கோ இதற்கு தலைமை ஏற்றார்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்