நாளை குளியங்காடு ஸ்ரீகருப்புசாமி கோயில் பொங்கல் விழா
First Published : 08 Sep 2009 10:31:58 AM IST
Last Updated :
HTML clipboardஈரோடு, செப். 7: ஈரோடு மாவட்டம், பெரியமோளபாளையம் குளியங்காடு கருப்புசாமி கோயில்
பொங்கல் விழா வரும் புதன்கிழமை (செப்.9) நடைபெற உள்ளது.
கடந்த மாதம் 28-ம் தேதி பூச்சாட்டுடன் பொங்கல் விழா தொடங்கியது.
இதனை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இரவு (செப்.8) மடப்பள்ளியிலிருந்து
சப்பாரத்துடன் வனத்திற்கு செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
புதன்கிழமை காலை 8 மணிக்கு பவானி ஆறுக்கு தீர்த்தம் எடுக்கச்செல்லும்
நிகழ்ச்சியும், 11 மணிக்கு கோயில் வந்து சேருதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.
மாலை 2 மணிக்கு பொங்கல் வைத்தலும் நடைபெற உள்ளது.
இரவு 8 மணிக்கு வானவேடிக்கையுடன் வனத்திலிருந்து புறப்பட்டு 10 மணிக்கு
மடப்பள்ளி வந்து சேர்தல் நிகழ்வும் நடைபெற உள்ளன.
மறு பூஜை மற்றும் மெரவனை ஊர்வலத்துடன் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை
முடிவடைகிறது.
ஏற்பாடுகளை கோயில் பூசாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.