லாலு பதவிக்காலத்தில் ஊழல்? சிபிஐ விசாரணைக்கு மம்தா பரிந்துரை
First Published : 18 Sep 2009 10:09:00 PM IST
Last Updated :
புதுதில்லி, செப். 17: லாலு பிரசாத் பதவிக் காலத்தில் ரயில்வே பணி நியமனம் மற்றும் டெண்டர்களில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி பிறப்பித்துள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வே பணி நியமனம் மற்றும் கான்ட்ராக்ட் விடுவதில் முறைகேடுகள் நடைபெற்றதாக ஐக்கிய ஜனதாதள எம்.பி.க்கள் புகார் கூறினர். இந்தப் புகார் குறித்து ஏற்கெனவே ரயில்வே ஊழல் கண்காணிப்புத் துறை விசாரித்து வருகிறது.