பிரதமர் மன்மோகனுடன் அமெரிக்க தூதர் சந்திப்பு
First Published : 19 Sep 2009 01:59:45 AM IST
Last Updated :
புதுதில்லி, செப்.18: பிரதமர் மன்மோகன் சிங்கை அமெரிக்க தூதர் டிமோதி ஜே ரோமர், வெள்ளிக்கிழமை சந்தித்து ஜி-20 உச்சி மாநாடு குறித்து விவாதித்தார். ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு வரும் 24 மற்றும் 25 தேதிகளில் அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங், வரும் 22-ம் தேதி புறப்படவுள்ளார். இந்நிலையில், மன்மோகனை சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை நடத்தியுள்ளார் ரோமர். முன்னதாக அவர், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்து மும்பை தாக்குதல் தொடர்பான விசாரணை மற்றும் அதில் பாகிஸ்தானின் செயல்பாடுகள் குறித்து விசாரித்து அறிந்தார்.