மீண்டும் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா சதித்திட்டம்
First Published : 01 Oct 2009 11:12:00 PM IST
Last Updated :
நியூயார்க், செப். 30: மும்பை தாக்குதல் சம்பவத்திற்குக் காரணமான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு மீண்டும் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. இதை அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் முன்னாள் மற்றும் இந்நாள் அதிகாரிகள் கூறியதாக அமெரிக்க நாளிதழ் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பைத் தாக்குதல் சம்பவத்திற்கான திட்டம் தீட்ட கராச்சியில் 4 வீடுகள், 2 பயிற்சிமுகாம்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தான் முன்னாள் ராணுவ மற்றும் புலனாய்வு அதிகாரிகள் சிலர், மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் சிலருக்கு பயிற்சி அளித்துள்ளனர். இந்நிலையில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தினர் இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.