Tuesday, February 09, 2010 9:21 PM IST
Click
இந்தியா
கைதான அமெரிக்க விஞ்ஞானியால் இஸ்ரோவுக்கு ஆபத்தில்லை: அதிகாரி

First Published : 22 Oct 2009 02:19:01 AM IST


பெங்களூர், அக். 21:   சந்திரயான்-1 செயற்கைக்கோள் திட்டத்தில் பணியாற்றிய அமெரிக்கா விஞ்ஞானியால் இஸ்ரோவுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
  இதுகுறித்து பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைமை செய்தித் தொடர்பாளர் எஸ். சதீஷ் பெங்களூரில் புதன்கிழமை கூறியதாவது:
  இஸ்ரேல் நாட்டுப் புலனாய்வுத்துறைக்கு உளவு பார்த்தாக ஸ்டீவர்ட் டேவிட் நொஜித்டெ என்ற அமெரிக்க விஞ்ஞானியை அமெரிக்க புலனாய்வுத் துறை போலீஸôர் கைது செய்துள்ளனர். இவர், சந்திரயான்-1 திட்டத்தில் இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்றியவர்.
  ஸ்டீவர்ட் சந்திரயான் திட்டத்தில் பணியாற்றினாரே தவிர இஸ்ரோவுக்கு அவர் அனுமதிக்கப்படவில்லை. ஸ்டீவர்ட்டிடம் செயற்கைக்கோள் திட்டங்கள் பற்றிய ரகசியங்கள் ஏதும் இல்லை. இதனால் இஸ்ரோவின் பாதுகாப்புக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. ஸ்டீவர்ட் கைது செய்யப்பட்டிருப்பது அமெரிக்காவின் உள்நாட்டு விவகாரம்.
  அதில் இஸ்ரோவுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. இஸ்ரோ பாதுகாப்பில் குறைபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் அவர்.

கருத்துக்கள்

Chandrayaan put few US experimental equipments into space. That is the one which found the ice on the moon. US scientist might have worked on that project.

By Raj
10/22/2009 8:02:00 PM

hello Mr ISRO/becarful from kubar narayanan&Nambi Narayanan,

By sekaran
10/22/2009 1:10:00 PM

Hello Mayilsamy/ISRO, Please clarrify if Chandrayan is fully developed by India or supported by foreign scientist. I think you are a big mouth.

By Riaz
10/22/2009 6:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்