Friday, September 03, 2010 2:09 PM IST
Click
இந்தியா
அருணாசலப்பிரதேசத்தில் காங்கிரஸ் மகத்தான வெற்றி

First Published : 23 Oct 2009 01:24:42 AM IST


இடா நகர், அக். 22:   அருணாசலப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 39 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

  இங்கு காங்கிரஸ் கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டது. மத்தியில் காங்கிரஸின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி முதல் முறையாக இம்மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் 26 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

  மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சி 36 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

  காங்கிரஸ் வெற்றி பெற்ற 39 தொகுதிகளில் முதலமைச்சர் டோர்ஜீ மற்றும் இரண்டு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

  இதுவரை மொத்தம் 58 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 41 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் தலா 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. பாஜக 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் 5 இடங்களைக் கைப்பற்றியுள்ளன. இம்மாநிலத்தில் பாஜக 18 தொகுதிகளில் போட்டியிட்டது.

  7 முறை தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு பெற்ற முன்னாள் முதல்வர் கெகோங் அபாங் மற்றும் அவருடைய மகன் ஒமக் அபாங் ஆகியோர் தோல்வியைத் தழுவினர்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்