புது தில்லி, அக். 23: தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மகாராஷ்டிரம், ஹரியாணா, அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு மேலிடப் பார்வையாளர்களை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது.
மூத்த தலைவர்கள் ஏ.கே. அந்தோனி, திக்விஜய் சிங், கே. ரஹ்மான் கான் ஆகியோர் மகாராஷ்டிர மாநில பார்வையாளர்களாகவும், கட்சியின் பொதுச் செயலர்கள் பிரித்வி ராஜ் சவாண், மோஷினா கித்வாய், பி.கே. ஹரிபிரசாத் ஆகியோர் ஹரியாணா மாநில மேலிடப் பார்வையாளர்களாகவும், அருணாச்சலப் பிரதேசத்துக்கு ஆஸ்கர் பெர்ணான்டஸ், லூயிùஸன்ஹோ ஃபெலீரோ, வி. நாராயணசுவாமி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அந்த மாநில முதல்வரைத் தேர்வு செய்யும் பணியை மேற்கொள்வார்கள்.
இத் தகவலை காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் தில்லியில் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது. அங்கு மொத்தமுள்ள 288 தொகுதிகளில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 144 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அருணாசலப் பிரதேசத்திலும் அக்கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. ஆனால் ஹரியாணாவில் மட்டும் ஆட்சியமைக்க மேலும் 6 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.