Tuesday, February 09, 2010 8:20 PM IST
Click
இந்தியா
பிறந்தநாள் பரிசாக சவாணுக்கு மீண்டும் முதல்வர் பதவி?

First Published : 24 Oct 2009 06:17:14 AM IST


மும்பை, அக். 23: பிறந்தநாள் பரிசாக மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாணுக்கு மீண்டும் முதல்வர் பதவி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
  நடந்துமுடிந்த பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பலம் பெற்றுவிட்டது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணி அரசு மீண்டும் பதவியேற்க உள்ளது.
  மும்பை தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு விலாஸ்ராவ் தேஷ்முக், முதல்வர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அசோக் சவாண் முதல்வராக நியமிக்கப்பட்டார். கடந்த 10 மாதங்களாக முதல்வராக உள்ள அவரது செயல்பாட்டில் காங்கிரஸ் தலைமை திருப்தி அடைந்துள்ளது.
  வரும் 28-ம் தேதி சவாண், 51-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். மீண்டும் அவருக்கு முதல்வர் பதவி வழங்குவது காங்கிரஸ் தலைமையால் வழங்கப்படும் பிறந்தநாள் பரிசாக கருதுவதாக அவரது தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்