அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை
First Published : 26 Oct 2009 11:58:00 PM IST
Last Updated :
இம்பால், அக். 25: மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இத்தகவலை, அம்மாவட்ட போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். லேங்டம் பகுதியில் போலீஸ் கமாண்டோக்களுடன் சனிக்கிழமை இரவு நடத்திய என்கவுன்ட்டரில் அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு என்கவுன்ட்டரில் மேலும் இரண்டு அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் நாஹரூப் பகுதியில் கொல்லப்பட்டனர். 9 மி.மீ. பிஸ்டல் மற்றும் ஒரு மோட்டார்சைக்கிள் மற்றும் சில ஆயுதங்களையும் அந்த இடங்களிலிருந்து போலீஸôர் கைப்பற்றினர். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மண்டல மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த தாக்குதலில் இந்த ஆண்டு மணிப்பூர் மாநிலத்தில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.