புது தில்லி, நவ. 9: போபர்ஸ் வழக்கு தொடர்பான விசாரணையை நவம்பர் 30-ல் மேற்கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை டிசம்பர் 11-ம் தேதி நடைபெறுவதாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
எனினும், சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.பி.மல்ஹோத்ரா ஆகியோரது வேண்டுகோளை ஏற்று நவம்பர் 30-ல் வழக்கு விசாரணையை மேற்கொள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி பி.சதாசிவம் ஆகியோர் திங்கள்கிழமை ஒப்புக் கொண்டனர்.
போபர்ஸ் வழக்கின் முக்கிய குற்றவாளியான குவாத்ரோச்சியை இந்தியாவுக்கு கொண்டு வர முடியாததால் வழக்கை முடித்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அண்மையில் மனு தாக்கல் செய்தது.