Friday, September 03, 2010 2:06 PM IST
Click
இந்தியா
புதிய அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி: தில்லியிடம் தமிழகம் வலியுறுத்தல்

First Published : 16 Nov 2009 12:24:00 AM IST

Last Updated : 16 Nov 2009 04:04:04 AM IST

புதுதில்லி, நவ. 15:   தமிழகத்தில் தொடங்கப்பட உள்ள 3 அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில மின் துறை அமைச்சர்களின் மாநாட்டில் பங்கேற்று அவர் ஆற்றிய உரை:

12-வது ஐந்தாண்டு திட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தமிழக அரசு முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மொத்தம் 3,400 மெகாவாட் திறன் கொண்ட 3 அனல் மின் நிலையங்களை அமைக்க முதல்வர் கருணாநிதி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த அனல் மின் நிலையங்களுக்கு நீண்ட காலத்துக்கு நிலக்கரி அளிப்பது குறித்து மத்திய நிலக்கரி அமைச்சகம் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த திட்டங்களுக்கு நிலக்கரி வழங்குவது குறித்து உடனடியாக உறுதி செய்யவேண்டும்.

தமிழ்நாடு மின் வாரியம் தேசிய அனல் மின் கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக வள்ளூரில் 1,500 மெகாவாட் மின் திட்டமும், தூத்துக்குடியில் தமிழ்நாடு மின் வாரியமும், நெய்வேலி நிலக்கரி கழகமும் இணைந்த 1,000 மெகாவாட் மின் திட்டமும் வளர்ச்சி நிலையில் உள்ளன. எதிர்காலத் தேவையை சமாளிப்பதற்கு, தமிழகத்தில் நிறுவப்பட்ட இந்த 2 திட்டங்களில் இருந்து 75 சதவீத மின்சாரத்தை எங்களுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும்.

கூடங்குளத்தில் அமைக்கப்படும் 2,000 மெகாவாட் அணு மின் நிலையம், நெய்வேலியில் 500 மெகாவாட் தயாரிக்கும் 2-வது அனல் மின் நிலையம் ஆகியவை 2010 ஜூன் மாதத்தில் உற்பத்தியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரவ எரிபொருளுக்கு விற்பனை வரி விலக்கை மத்திய அரசு அளித்தால் ஒட்டுமொத்தமாக மின் உற்பத்தி யூனிட்டுக்கு 50 முதல் 60 பைசா வரை குறையும் என்றார்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்