அக். 6-ல் வேலைநிறுத்தம்: நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் தீர்மானம்
First Published : 23 Sep 2009 08:32:34 AM IST
Last Updated :
தஞ்சாவூர், செப். 22: ஓய்வூதியம் கோரி அக்டோபர் 6-ம் தேதி நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்கின்றனர். தஞ்சாவூரில் அண்மையில் நடைபெற்ற நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐடியுசி தொழில் சங்க மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த வேலைநிறுத்தத்தில் முழுமையாகப் பங்கேற்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசுப் பணியாளர்களுக்கு வழங்குவது போல ஊதியத்தில்சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். போலி குடும்ப அட்டைகள் சரிபார்க்கும் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்களுக்கு 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு ரூ. 2,000 ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மாநில துணைத்தலைவர் ஆர். செல்வராஜ் தலைமை வகித்தார். பொதுச் செயலர் சி. சந்திரகுமார், இணைப் பொதுச் செயலர் ஜெ. குணசேகரன், பொருளாளர் தி. கோவிந்தராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.