மகளிர் கல்லூரியில் கருத்தரங்கு
First Published : 23 Sep 2009 11:38:23 AM IST
Last Updated :
காரைக்குடி, செப். 22: அமராவதிபுதூர் ஸ்ரீ சாரதாநிகேதன் மகளிர் கல்லூரியில் சக்திவளம் மற்றும் உலகம் வெப்பமாதல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக கல்லூரி வளர்ச்சிக் குழும முதன்மையர் டி.ஆர். குருமூர்த்தி கருத்தரங்கைத் துவக்கிவைத்தார். மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் ஓய்வுபெற்ற விஞ்ஞானி பி. யக்ஞநாராயணன் தலைமை வகித்தார். காரைக்குடி மக்கள் சக்தி இயக்க இயக்குநர் வி. பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.