Friday, September 03, 2010 2:09 PM IST
Click
விளையாட்டு
தமிழக ஒருங்கிணைந்த மாவட்டங்கள் அணிக்கு புச்சிபாபு கோப்பை

First Published : 30 Aug 2009 03:34:22 AM IST


சென்னை, ஆக. 29:   தமிழக ஒருங்கிணைந்த மாவட்டங்கள் அணி முதல்முறையாக புச்சி பாபு கிரிக்கெட் கோப்பையை வென்றது.

  புச்சிபாபு கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் நடைபெற்று வந்தன. இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழக ஒருங்கிணைந்த மாவட்டங்கள் அணியும், ஹைதரபாத் லெவன் அணியும் மோதின.

  முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 154 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தமிழக ஒருங்கிணைந்த மாவட்டங்கள் அணி 3 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. அருண் கார்த்திக் சிறப்பாக விளையாடி 68 ரன்கள் குவித்தார்.

  இதையடுத்து தமிழக அணி கோப்பையைத் தட்டிச் சென்றது. அணிக்கு கோப்பையும், ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் கிடைத்தது. 2-ம் இடம் பிடித்த ஹைதராபாத் அணிக்கு ரூ.50 ஆயிரம் பரிசு கிடைத்தது.  வெற்றி பெற்ற அணிகளுக்கு இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் பரிசுகளை வழங்கினார்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்