Tuesday, February 09, 2010 5:55 PM IST
Click
விளையாட்டு
ஆச்சர்யத்தில் ஆழ்த்திய மத்திய அமைச்சர் மம்தா

First Published : 30 Aug 2009 03:35:59 AM IST


குடியரசுத் தலைவரிடமிருந்து விருதை பெறுகிறார் மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி.
புது தில்லி, ஆக. 29:   விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்ட விருது வழங்கும் விழாவில் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு ஆச்சர்யம் ஏற்படுத்தினார்.

  விளையாட்டு வீரர்களுக்கு விருது வழங்கும் விழா தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்றது.

  விருது வழங்கும் விழாவில் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியத்துக்கு, குடியரசுத் தலைவரின் ராஷ்டிரிய கேல் புரோத்சாஹன் விருது (தேசிய விளையாட்டு ஊக்கமூட்டும் விருது) வழங்கப்பட்டது.

  இதையடுத்து ரயில்வே வாரியத்தின் சார்பில் அந்த விருதை குடியரசுத் தலைவர் பிரதிபாவிடமிருந்து மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி பெற்றுக்கொண்டார்.

  விழாவில் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு விருது பெற்றது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்