சாலஞ்சர் டிராபி: சச்சின் விலகல்
First Published : 08 Oct 2009 11:43:00 PM IST
Last Updated :
நாகபுரி, அக். 7: சாலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டியிலிருந்து சச்சின் டெண்டுல்கர் விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு தினத் தொடர் விரைவில் நடைபெற உள்ளதால் ஓய்வு எடுப்பதற்காக டெண்டுல்கர் இதில் பங்கேற்கவில்லை. சாலஞ்சர் டிராபி ஒரு தின கிரிக்கெட் போட்டி வியாழக்கிழமை (அக்டோபர் 8) முதல் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) வரை நாகபுரியில் பகலிரவாக நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் இந்தியா புளூ அணிக்கு தோனியும், இந்தியா ரெட் அணிக்கு எஸ்.பத்ரிநாத்தும், இந்தியா கிரீன் அணிக்கு சுரேஷ் ரெய்னாவும் தலைமை வகிக்கின்றனர். சச்சின் டெண்டுல்கருக்கு பதிலாக தமிழக வீரர் அபிநவ் முகுந்த் சேர்க்கப்பட்டுள்ளார். யுவராஜ் சிங், இர்பான் பதான் ஆகியோர் காயம் காரணமாக இதில் விளையாடவில்லை. திராவிட், சேவாக், கம்பீர், ரோஹித் சர்மா ஆகியோர் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பங்கேற்பதால் இதில் விளையாட முடியவில்லை.