இந்திய பளுதூக்கும் வீரர், வீராங்கனைக்கு ஆயுள் தடை?
First Published : 14 Oct 2009 10:58:00 PM IST
Last Updated :
புது தில்லி, அக். 13: ஊக்கமருந்து பயன்படுத்தியதால் இந்திய பளுதூக்கும் வீராங்கனை ஷைலஜா பூஜாரி, வீரர் விக்கி பாத்ரா ஆகியோருக்கு ஆயுள் தடை விதிக்கப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்தின் (ஐடபிள்யூஎஃப்) செயலாளர் பி.ஆர். குலாதி நிருபர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: 75 கிலோ பிரிவு வீராங்கனை ஷைலஜா, 56 கிலோ பிரிவு வீரர் விக்கி பாத்ரா ஆகியோருக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தியதில் அவர்கள் ஊக்கமருந்து உட்கொண்டார்கள் என்பது தெரியவந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் சோதனையில் அவர்கள் ஊக்கமருந்து உட்கொண்டது தெரியவந்தது. இந்த சோதனை முடிவுகளை எதிர்த்து அவர்கள் அப்பீல் செய்ய இன்னும் 3 நாட்கள் மட்டுமே பாக்கியுள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால் அவர்களுக்கு ஆயுட்காலத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றார் அவர்.