மதுரை போலீஸ் அணிக்கு 2-ம் இடம்
First Published : 16 Nov 2009 04:48:11 AM IST
Last Updated :
மதுரை, நவ. 15: காவல்துறை சார்பில், சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், மதுரை போலீஸ் அணி 2-ம் இடம் பெற்றது. கடந்த வாரம் சென்னையில் ஜூடோ, மல்யுத்தம், கராத்தே உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில், தென்மண்டல காவல்துறை சார்பில் வீரர்கள் கலந்துகொண்டனர். ஜூடோ பிரிவில் தலைமைக் காவலர் சந்திரமோகன் தங்கப் பதக்கத்தை வென்றார். தலைமைக் காவலர் வனராஜா, முதல்நிலை தலைமைக் காவலர் குமரேசன், காவலர்கள் ஜெகநாதன், பூ. பாலகிருஷ்ணன், ராஜா சுதாகர் ஆகியோர் ஜூடோ போட்டியில் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். கராத்தே போட்டியில் காவலர்கள் பாண்டிசெல்வம், ரமேஷ்பாபு ஆகியோரும், ரங்கநாதன், ராஜா ஆகியோர் மல்யுத்தத்திலும் வெள்ளிப் பதக்கம் வென்றனர். கராத்தே போட்டியில் தலைமைக் காவலர் வனராஜா, முதல்நிலைக் காவலர் குமரேசன், ஜூடோவில் தலைமைக் காவலர் சங்கர், காவலர் ரமேஷ்பாபு ஆகியோர் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். வெற்றி பெற்ற வீரர்களை மாநகர் காவல் ஆணையர் கே. நந்தபாலன் பாராட்டினார்.