பாதுகாப்பை விலக்கிக்கொள்ள சோம்நாத் வலியுறுத்தல்
First Published : 30 Aug 2009 02:40:05 AM IST
Last Updated :
30 Aug 2009 04:04:35 AM IST
புது தில்லி, ஆக. 29: தனக்கு அளிக்கப்பட்டுவரும் பாதுகாப்பை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.மக்களவைத் தலைவர் பதவிக்காலம் முடிந்தபிறகு பெரும்பாலும் கோல்கத்தாவில் இருந்துவருகிறார் சோம்நாத். அவர் தில்லி வரும் சமயங்களில் அவர் தங்கியிருக்கும் இடத்தில் பாதுகாவலர்கள் போடப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக உள்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், பாதுகாப்பு தருமாறு நான் கோரவில்லை. தனக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை திரும்பப் பெறவேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.