Tuesday, February 09, 2010 9:21 PM IST
Click
தமிழகம்
நதிநீர் இணைப்பு: ராகுல் கருத்துக்கு பாஜக எதிர்ப்பு: இல. கணேசன்

First Published : 13 Sep 2009 01:45:15 AM IST


சென்னை, செப்.12: ""தேசிய அளவில் நதிகளை இணைப்பது சுற்றுச் சூழலைப் பாதிக்கும் என்ற கற்பனையான காரணத்தைக் கூறி மக்களை ஏமாற்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி முயல்கிறார்'' என்று பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் இல. கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இல. கணேசன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஒரு புறம் வெள்ளமும், மறு புறம் தண்ணீர் பஞ்சமும் நிலவுகிற நிலையை மாற்ற, வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில் நதிகளை இணைக்கும் திட்டத்தை அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின், காங்கிரஸ் தலைமையிலான அரசு, நதிநீர் இணைப்புத் திட்டத்தை கிடப்பில் போட்டது. இந்தத் திட்டத்துக்கு காங்கிரஸ் முன்னுரிமை தரவில்லை என கருதப்பட்டது.

ஆனால் தமிழகத்துக்கு விஜயம் செய்த ராகுல் காந்தி, நதிநீர் இணைப்புத் திட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அக்கறை இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார். நதிகளை இணைப்பது சுற்றுச் சூழலைப் பாதிக்கும் என்று கற்பனையான காரணத்தைக் கூறி மக்களை ஏமாற்ற முயன்றுள்ளார். இவருடைய கருத்துக்கு முதல்வர் கருணாநிதி என்ன பதில் அளிக்கப் போகிறார் என்று தெரியவில்லை.

ராகுல் காந்தியின் கருத்துக்கு தமிழக மக்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டும். பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் என இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

ராமகோபாலன்: இதுபோல் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலனும் கண்டனம் தெரிவித்துள்ளார். ""தேசிய நதிநீர் இணைப்பு ஆபத்தானது என்ற ராகுல் பேச்சு பொறுப்பற்றது. கண்டிக்கத்தக்கது. நதிநீர் இணைப்புக்கு பல நிபுணர்கள் அளித்த ஆய்வு முடிவுகள் மத்திய அரசிடம் உள்ளன. உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் பேசுகிறார். இதற்கு நதி நீர் இணைப்பு முக்கியம் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த முறை ஆட்சிப் பொறுப்பு ஏற்ற உடன் நதி நீர் இணைப்பு ஆய்வில் இருப்பதாகவும், விரைவில் திட்டம் வகுக்கப்படும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் பதில் அளித்தது. ஆனால், பல ஆண்டுகள் கடந்த பின்னும் எந்தவொரு திட்டமும் வகுக்கப்படவில்லை. இந்த நிலையில் கட்சியின் உள்நோக்கத்தை ராகுல் காந்தி வெளிப்படுத்தியுள்ளார். மத்திய அரசு தேசிய நதி நீர் இணைப்பு குறித்து தனது செயல்பாட்டை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்'' என ராம கோபாலன் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

Yes must give a chance to BJP again to develop india

By Murali
9/14/2009 3:57:00 PM

Well Said. Let us start with Kaveri River. First of all, let Karnataka, which is being ruled by BJP, release the quantum of water ordered by the Supreme Court. Let Eal.Ganasan talk about the linking of rivers after such release of water.

By Nagarajan
9/14/2009 10:13:00 AM

BJP should come to power to remove corrupt anti-Tamil congress. BJP always made Tamils secure, prosper and supported them in India and abroad. Culprits don't like it, as corrupts have their own selfish motives.

By keeran
9/13/2009 11:06:00 PM

where is this political old prostitute karunanithi comment about this italian koovam statement. italian koovams get lost from india and indian politics

By reg
9/13/2009 7:06:00 PM

Hope BJP comes to power next time and implements the project for linking the rivers of India. The useless Congress party had spoiled the country for 50 years. People will defeat Congress next time.

By GANESSIN
9/13/2009 4:33:00 PM

பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் என இல. கணேசன் கூறுகிறார். என்ன வேடிக்கை. பாலுக்கு பூனை காவலாம். முட்டாள்களின் கையில் ஆட்சி போனால்??? ஏற்க்கனவே இந்தியா ஒளிர்கிறது என்று சொல்லி பல கோடிகளை சுருட்டி ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் அடிவருடிகளுக்கு கணக்கில் போட்டாகிவிட்டது. இன்னும் இவர்களுக்கு ஆசையா? வந்தேறி பார்ப்பன நாய்களால் நம் தேசம் தலை குனிந்ததுதான் மிச்சம்.

By Boomi
9/13/2009 3:15:00 PM

The bjp, cong, jd, etc., jokers should know how to share the waters with in one river before joining national rivers.

By Thara
9/13/2009 8:54:00 AM

NATHI NEER INAIPPAAL THAMIZHAGATHTHIN VAANAM PAARTHTHA BOOMI VALAM PERUM ENBATHU NICHAYAM. -Arima Ilangkannan(US)

By P.Balakrishnan
9/13/2009 8:23:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்