Tuesday, February 09, 2010 9:22 PM IST
Click
தமிழகம்
புறநகர் பகுதிகளில் திமுக வெற்றி

First Published : 10 Oct 2009 04:19:19 AM IST


தாம்பரம், அக்.9:   ஆலந்தூர், திரிசூலம், பல்லாவரம், சித்தாலப்பாக்கம், காட்டாங்கொளத்தூர் ஆகிய புறநகர் பகுதிகளில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

  பீர்க்கன்கரணையில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

  பல்லாவரம் நகராட்சி 7-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சட்டக்கல்லூரி மாணவி என்.அமுதா, 1,108 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சாந்தி 405 வாக்குகளும் பெற்றனர். 703 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். பீர்க்கன்கரணை பேரூராட்சி 8-வது வார்டில் அதிமுக வேட்பாளர் சம்பத் 196 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சுப்பிரமணியன் 171 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் லாவண்யா 168 வாக்குகளும் பெற்றனர். 25 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சம்பத் வெற்றி பெற்றார்.

  காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் 15-வது வார்டில் திமுக வேட்பாளர் எம். கற்பகம் முனிராஜ் 1,728 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 978 வாக்குகளும் பெற்றனர். 750 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கற்பகம் முனிராஜ் வெற்றி பெற்றார்.

  சித்தாலப்பாக்கம் ஊராட்சி 2-வது வார்டில் திமுக வேட்பாளர் எழில்பாண்டியன் 1,393 வாக்குகளும் ,அதிமுக வேட்பாளர் சித்திரை வேலு 523 வாக்குகளும் பெற்றனர். 870 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் எழில்பாண்டியன் வெற்றி பெற்றார். திரிசூலம் ஊராட்சியில் திமுக வேட்பாளர் ஆர்.திலகவதி ராமச்சந்திரன் 2,695 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஜெ.சரஸ்வதி ஜெய்சங்கர் 2,116 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் கன்னையா 957 வாக்குகளும் பெற்றனர். திமுக வேட்பாளர் ஆர்.திலகவதி ராமச்சந்திரன் 579 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்