Tuesday, February 09, 2010 4:44 PM IST
Click
தமிழகம்
அரசு பணியாளர் தேர்வுகளில் காமராஜர் பல்கலை.யின் எம்.எட். படிப்பு பி.எட்- க்கு இணையாகாது

First Published : 15 Nov 2009 02:19:46 AM IST


சென்னை, நவ. 14:  மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் எம்.எட். தொழில்நுட்பம் படிப்பை வழங்கி வருகிறது. இந்தப் படிப்பின் முதலாமாண்டை பி.எட். பட்டப் படிப்புக்கு இணையாகக் கருத முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கு கல்வித் தகுதியாக பட்டப் படிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகளை இளங்கலை, முதுகலை, தொழில்நுட்பப் பாடங்களை படித்தவர்களும் எழுதி வருகின்றார்கள்.
  இதில், அரசுப் பணியாளர் தேர்வுகளை, தொழில் நுட்பப் படிப்பான வேளாண்மை துறை பட்டதாரிகளும் எழுதலாம் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டது.
  ஒரே நிலையாகக் கருத...  இந்த நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தான் நடத்தி வரும் எம்.எட். தொழில்நுட்பம் (செமஸ்டர் முறை) படிப்பு தொடர்பாக அரசுக்கு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
  "அரசு பணியாளர் தேர்வுகளை எழுத விரும்பும் எம்.எட். தொழில்நுட்பம் முதலாமாண்டு மாணவர்களை, பி.எட். பட்டப் படிப்புக்கு இணையாகக் கருத வேண்டும்' என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கோரிக்கை விடுத்து இருந்தது.
  இந்தக் கோரிக்கை குறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கருத்தை அரசு கோரியது.
  தேர்வாணையம் அளித்த பதிலில், ""மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் விடுத்த கோரிக்கை தொடர்பாக, ஆணையத்தின் கமிட்டி கூடி விவாதித்தது. அதில், அரசுப் பணியாளர் தேர்வுகளின் போது, எம்.எட். தொழில்நுட்பப் படிப்பை பி.எட். - க்கு இணையாகக் கருத முடியாது'' என்று கூறியுள்ளது.
  தேர்வாணையத்தின் இந்த முடிவை அப்படியே ஏற்றுக் கொள்வதாக தமிழக அரசும் தெரிவித்துள்ளது. இதுகுறித்த உத்தரவை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பதிவாளருக்கு, அரசு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறையின் செயலாளர் அனுப்பி வைத்துள்ளார்.

 

கருத்துக்கள்

Agreeing the fact then why Universities are conducting such courses. Let the Govt. come with a bold decision and put an end to the menace.

By v.gopinath
11/15/2009 6:42:00 AM

It has become too easy to get a degree from Kamaraj university even without any basic qualifications.such degrees are not worth to be considered for Job Market.Most of the people who got the degree by regular stream are hesitating to add such degrees with their names as these easy markets for getting a degree at a low cost has outbeated the true and originals!

By Thangam.Murugesan
11/15/2009 6:27:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்