பிரிட்டன் குழந்தைகள் நல அமைப்புக்கு காந்தி சர்வதேச அமைதி விருது
First Published : 16 Oct 2009 12:07:00 AM IST
Last Updated :
லண்டன், அக். 15: பிரிட்டனைச் சேர்ந்த குழந்தைகள் நல அமைப்புக்கு மிகஉயரிய காந்தி சர்வதேச அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் குழந்தைகளில் உரிமைகளைப் பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பாராட்டி இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு லண்டனில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது. இது குறித்து இந்த அமைப்பைச் சேர்ந்தவரும், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மனைவியுமான செர்ரி பிளேர் கூறியது: எங்கள் அமைப்பு பிரிட்டனில் மட்டுமின்று உலகம் முழுவதும் குழந்தைகள் உரிமை மற்றும் நலனைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. எங்கள் அமைப்பில் பணியாற்றும் அனைத்து சமூகநல ஆர்வலர்களுக்கும் ஒட்டுமொத்தமாக இந்த விருது வழங்கப்பட்டதாகவே கருதுகிறோம் என்றார் அவர். காந்தி பவுண்டேஷன் இந்த விருதை வழங்கி வருகிறது.