அணு ஆயுதப் பாதுகாப்பு: ஈரான் மீது யு.எஸ். குற்றச்சாட்டு
First Published : 19 Nov 2009 01:41:33 AM IST
Last Updated :
வாஷிங்டன், நவ.18: ஈரான், யுரேனியம் செறிவூட்டல் மற்றும் அணுஆயுதப் பாதுகாப்பு விஷயத்தில் சர்வதேச கடமையையும், பொறுப்பையும் மறந்து செயல்படுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.÷அணுஆயுதப் பாதுகாப்பு விஷயத்தில் ஈரான் பின்பற்றி வரும் நடைமுறை குறித்து சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇ) ஈரானிடம் விளக்கம் கோரியுள்ளது. விளக்கம் கோரி ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை எவ்விதப் பதிலையும் அளிக்காமல் ஈரான் அமைதி காத்து வருகிறது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கெல்லி தெரிவித்துள்ளார்.÷ஈரான் விவகாரத்தில் தற்போதைய நிலையில் திடீரென எந்த ஒரு முடிவையும் எடுக்க அமெரிக்கா விரும்பவில்லை. ஏனென்றால்,ஈரான் தனது அணுஆயுதப் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக உரிய பதிலை முறையாக அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இதனால் ஈரானின் விளக்கத்துக்காக காத்திருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.÷அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதையும், யுரேனியம் செறிவூட்டும் நடைமுறையையும் நிறுத்திக்கொள்ள வேண்டும், சர்வதேச அணுசக்தி முகமை நேரடி கண்காணிப்புக்கு அனுமதிக்க வேண்டும் என ஈரானிடம் அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஈரான் இதற்கு உடன்பட மறுத்து வருகிறது.