Friday, September 03, 2010 1:46 PM IST
Click
உலகம்
காஷ்மீர் குறித்து பேச வேண்டும்: குரேஷி

First Published : 30 Jul 2010 05:52:15 AM IST


இஸ்லாமாபாத், ஜூலை 29: ஜம்மு-காஷ்மீர், நதிநீர்ப் பகிர்வு குறித்த பேச்சுவார்த்தைக்கு இந்தியா முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கூறினார்.

  கராச்சியில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:

  இரு நாட்டு பேச்சுவார்த்தையின்போது தீவிரவாதம், மும்பை தாக்குதல் குறித்து மட்டுமே இந்திய தரப்பில் வலியுறுத்தப்படுகிறது. அதேசமயம், காஷ்மீர் பிரச்னை, நதிநீர்ப் பகிர்வு, சியாச்சின், சர் கிரீக் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த பாகிஸ்தான் கோரிக்கைகளுக்கும் இந்தியா செவிசாய்க்க வேண்டும்.

  இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கையை வளர்க்கும் வகையில் நல்லெண்ண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இப்போதைய பேச்சுவார்த்தை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றார்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்