அன்னை தெரசா மகளிர் பல்கலை.யில் பெண்கள் தின விழா
First Published : 10 Mar 2010 11:07:55 AM IST
Last Updated :
கொடைக்கானல், மார்ச் 9: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் சார்பில் பெண்கள் தினவிழா கொண்டாடப்பட உள்ளதாக, பல்கலைக்கழக துணைவேந்தர் அருணா சிவகாமி தெரிவித்துள்ளார்.இது குறித்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச மகளிர் நூற்றாண்டு விழா மற்றும் பல்கலைக்கழகத்தின் 25-வது ஆண்டு வெள்ளி விழா தொடக்க நிகழ்ச்சியும், பல்கலைக்கழக வளாகத்தில் மார்ச் 11-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந் நிகழ்ச்சியில், வருவாய்த் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். விழாவில், முன்னாள் துணைவேந்தர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர். மேலும், 25 ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த ஆசிரியர்கள் அல்லாத அலுவலர்களும் கௌரவிக்கப்படுகின்றனர். பெண்கள் தின விழாவை முன்னிட்டு, பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த விழாவில், பல்கலைக்கழக மாணவிகள் மற்றும் இணைப்பு பல்கலைக்கழகம், உறுப்பு பல்கலைக்கழக மாணவிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்றார் துணைவேந்தர்.