Friday, September 03, 2010 1:47 PM IST
Click
தற்போதைய செய்திகள்
அமைச்சர்களிடம் பா.ஜ.க. கவுன்சிலர் கோரிக்கை மனு

First Published : 31 Jul 2010 12:13:46 PM IST


ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 30: ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பாரதீய ஜனதா கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் பி.கே.ராமசாமி நேரில் சந்தித்து தனது வார்டு மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி மக்களின் கோரிக்கைகளை அடங்கிய மனுவை அளித்தார். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

நகர்மன்ற உறுப்பினர் பி.கே.ராமசாமி அளித்த மனுவின் விவரம்:    26-வது வார்டில் குடிநீர்ப் பிரச்னை அதிகமாக உள்ளது. நீர் தேக்கி வைத்து விநியோகம் செய்யப் பயன்படும் 4 சின்டெக்ஸ் தொட்டிகள் கடந்த 6 மாதங்களாகப் பழுதாகியுள்ளன. பலமுறை இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள், நகர்மன்றத் தலைவர் ஆகியோரை பொதுமக்களுடன் நேரில் சென்று முறையிட்டும் பயனில்லை. பொது மக்கள் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் இதனை சீர்செய்து தர வேண்டும்.

மேலும் வறட்சியைக் கருத்தில் கொண்டு இப் பகுதியில் கூடுதலாக இரு ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

   ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் போதிய சுகாதாரப் பணியாளர்கள் இல்லாத காரணத்தால், சுகாதார சீர்கேடு நிறைந்து தொற்று நோய்கள் பரவும் அபாயகரமான நிலையுள்ளது. கூடுதல் சுகாதாரப் பணியாளர்களை நியமித்து, இப் பணி தொய்வின்றி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

   ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு மாத்திரைகள் சாப்பிட மற்றும் குடிக்க, கொதிக்க வைத்து ஆற வைத்த பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து மக்களும் பயன்படுத்தும் திருமுக்குளம் சிதிலமடைந்து உள்ளது. இதைச் செப்பனிட வேண்டும். மேலும் நகர்மன்ற திரு.வி.க. உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தி இப் பகுதி அனைத்து ஏழை மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்