இந்திய கடல் எல்லையில் நுழைந்த 17 சிங்கள மீனவர்கள் கைது
First Published : 12 Mar 2010 01:30:39 AM IST
Last Updated :
மசூலிப்பட்டினம், மார்ச் 11: இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 17 சிங்கள மீனவர்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் கடற்கரை பகுதியில் 3 படகுகளில் வந்த இவர்களை அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். வழி தவறி இந்தியப் பகுதிக்குள் வந்து விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று ஆந்திர மாநில போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.