Saturday, July 31, 2010 4:09 AM IST
Click
விளையாட்டு
இன்றுமுதல் காரைக்காலில் அகில இந்திய வாலிபால் போட்டி

First Published : 10 Mar 2010 01:55:18 AM IST


சென்னை, மார்ச் 9: நெடுங்காடு விளையாட்டுக் கழகம் சார்பில் நடத்தப்படும் ஆடவர் மற்றும் மகளிருக்கான அகில இந்திய வாலிபால் போட்டி காரைக்காலில் புதன்கிழமை தொடங்குகிறது. மார்ச் 14-ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டிகளில் ஆடவர் மற்றும் மகளிர் சார்பில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டிகள் லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடத்தப்படுகின்றன. வெற்றிபெறும் அணிகளுக்கு ஏர்-செல் டிராபியுடன் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.

ஆடவர் அணிகள்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (சென்னை), தெற்கு ரயில்வே (சென்னை), பிபிசிஎல் (கொச்சின்), ஓஎன்ஜிசி (டேராடூன்), இந்தியன் வங்கி (சென்னை), கஸ்டம்ஸ் (சென்னை). மகளிர் அணிகள்: மத்திய ரயில்வே (மும்பை), தென் மத்திய ரயில்வே (செகந்திராபாத்), தெற்கு ரயில்வே (சென்னை), மேற்கு ரயில்வே (மும்பை), டாக்டர் சிவந்தி கிளப் (சென்னை), செயின்ட் ஜோசப் கல்லூரி (சென்னை). காரைக்காலில் 2-வது ஆண்டாக இப்போட்டி நடத்தப்படுவதாக போட்டி அமைப்பாளர்கள் ஜி.என்.எஸ். ராஜசேகரன், எஸ்.சிவானந்தம், அமைப்புச் செயலர் ஜெ. நடராஜன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்