Friday, September 03, 2010 1:47 PM IST
Click
தற்போதைய செய்திகள்
இருளில் ராமேசுவரம் தெருக்கள்

First Published : 31 Jul 2010 12:26:50 PM IST


ராமேசுவரம், ஜூலை 30:   ராமேசுவரம் நகராட்சியில் ஏராளமான தெரு விளக்குகள் பழுதாகி உள்ளதால் பல தெருக்கள் இருளில் மூழ்கி கிடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

 இந்நகராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. சுமார் 50 பேர் வசிக்கின்றனர்.

 இந்நிலையில், இப்பகுதி  மக்களுக்குத் தேவையான சுகாதாரம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சியால் சரிவரச் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 4, 5, 6-வது வார்டுகளில் உள்ள மாந்தோப்பு, வேர்கோடு, இந்திரா நகர்,  அட்டம்மாள் தெரு ஆகிய பகுதிகளில் பல இடங்களில், குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன.

 பெரும்பாலான தெருவிளக்குகள் பழுதாகிக் கிடக்கின்றன.

 இரவில் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடப்பதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

 இதுகுறித்து புகார் தெரிவித்தால், நகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்க வில்லையாம்.

 இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்