கியோட்டோ ஏடிபி டென்னிஸ்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் தோல்வி
First Published : 11 Mar 2010 04:40:13 AM IST
Last Updated :
புது தில்லி, மார்ச் 10: கியோட்டோ ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் விஷ்ணு வர்தன் முதல் சுற்றிலேயே வெளியேறினார்.முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் சதிக் கதிரிடம் 7-6, 2-6, 4-6 என்ற கணக்கில் விஷ்ணுவர்தன் தோல்வியுற்றார். எனினும் இரட்டையர் போட்டியில் இவர் திவிஜுடன் இணைந்து காலிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளார்.மற்றொரு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் பூர்வ ராஜா - ஆஸ்திரேலியாவின் சதிக் கதிர் ஜோடி 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஜப்பான் ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.