Saturday, July 31, 2010 4:05 AM IST
Click
விளையாட்டு
குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 3 தங்கம்

First Published : 09 Feb 2010 12:00:00 AM IST


டாக்கா,​​ பிப்.​ 8:​ தெற்காசிய விளையாட்டு குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட 3 வீரர்களும் தங்கள் பிரிவுகளில் தங்கப் பதக்கத்தை வென்றனர்.

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் 11-வது தெற்காசிய விளையாட்டில் குத்துச் சண்டைப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.​ இதில் 57 கிலோ பிரிவில் இந்தியாவின் சோட் லால்,​​ 51 கிலோ பிரிவில் சுரண்ஜாய்,​​ 48 கிலோ பிரிவில் அமன்தீப் ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றனர்.

54,​ 60,​ 64 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டைப் போட்டியில் வங்கதேச வீரர்கள் மூவர் தங்கம் வென்றனர்.​ இந்தப் பிரிவுகளில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை.

டேக்வாண்டோவில் 4 பதக்கம்:​​ டேக்வாண்டோ போட்டியில் ஆண்களுக்கான 87 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சந்தீப் குண்டு,​​ இலங்கை வீரர் ரவீந்திர ராஜபட்சவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.​ பெண்களுக்கான 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் லத்திகா பண்டாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.​ இந்தப் பிரிவில் நேபாளத்தின் ஆயிஷா தங்கம் வென்றார்.​ ​

57 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை ​ சிருஷ்டி சிங்கும்,​​ 87 கிலோ பிரிவில் இந்திய வீரர் நகுல் மல்கோத்ராவும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்