Saturday, July 31, 2010 4:15 AM IST
Click
முக்கியச் செய்திகள்
கும்பகோணம் அருகே​ மொபெட்​டில் சென்​ற​வர் சாவு

First Published : 09 Feb 2010 08:33:34 AM IST

Last Updated : 09 Feb 2010 09:51:56 AM IST

கும்பகோணம்,​​ பிப்.8:​ கும்பகோணம் அருகே மொபெட்டில் சென்றவர்,​​ திங்கள்கிழமை காலை உயிரிழந்த நிலையில் கிடந்தார்.

​ ​ கோவிந்தகுடி ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கரும்பாயிரம் மகன் ரமேஷ் ​(32).​ லாரி ஓட்டுநரான அவர்,​​ மூங்கில் வியாபாரமும் செய்து வந்தார்.​ ​ இவருக்கு மனைவி,​​ மகள்கள் உள்ளனர்.

​ ​ இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை,​​ கும்பகோணம் சென்று வருவதாகக் கூறி மொபெட்டில் ரமேஷ் சென்றார்.​ ஆனால்,​​ திங்கள்கிழமை காலை சோழன்மாளிகை அருகே பாசனவாய்க்காலில் மொபெட்டுடன்,​​ தலையில் காயத்துடன் அவர் இறந்து கிடந்தார்.

​ ​ தகவலறிந்த பட்டீஸ்வரம் போலீஸôர்,​​ சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.​ விபத்து பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்