கொடைக்கானலில் பால்குட ஊர்வலம்
First Published : 10 Mar 2010 11:11:15 AM IST
Last Updated :
கொடைக்கானல், மார்ச் 9: கொடைக்கானல் குறிஞ்சி நகரிலுள்ள அருள்மிகு குறிஞ்சி நகர்மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றதுஇந்த விழாவை முன்னிட்டு டிப்போ கான்வென்ட் ரோடு பகுதியிலுள்ள காளியம்மன் கோவிலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். ஊர்வலமானது ஏரிச்சாலை, செவண் ரோடு, அண்ணாசாலை, மூஞ்சிக்கல், ஆனந்தகிரி ஆகிய பகுதிகளில் சென்றது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இந்த நிகழ்ச்சியில் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.