சதுரங்கப் போட்டி: எஸ்.எம்.பி.எம். பள்ளி முதலிடம்
First Published : 08 Feb 2010 10:08:33 AM IST
Last Updated :
திண்டுக்கல், பிப். 7: திண்டுக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் அதிக புள்ளிகளைப் பெற்று எஸ்.எம்.பி.எம். மெட்ரிக். பள்ளி முதலிடத்தைப் பெற்றது. திண்டுக்கல் ஸ்ரீமகரிஷி வித்யா மந்திர் பள்ளி சார்பில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இதில் 35 பள்ளிகள் சார்பில் 292 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் அதிக புள்ளிகளை எஸ்.எம்.பி.எம் மெட்ரிக். பள்ளி பெற்று, முதலிடத்தைத் தட்டிச் சென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்ரீ மகரிஷி வித்யா மந்திர் பள்ளித் தாளாளர் டி. கோதைசெல்வன் பரிசுகளை வழங்கினார்.