தலித் கலை இலக்கியக் கழக நிர்வாகிகள் தேர்வு
First Published : 11 Mar 2010 10:31:37 AM IST
Last Updated :
பழனி, மார்ச் 10: பழனியில் தலித் கலை இலக்கியக் கழகத்தின் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் பழனி சிவா புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார். மாவட்ட தலைவராக ராஜா, மாவட்டச் செயலாளராக ரவிபட், நகரச் செயலாளராக ஹரிஹரன், ஒன்றியச் செயலாளராக சந்தோஷ், ஒன்றிய தலைவராக காளிமுத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் ஆயக்குடி பேரூராட்சி சார்பில் பாலன், தொப்பம்பட்டி ஒன்றிய அமைப்பாளராக கருப்புச்சாமி, பாப்பம்பட்டி தலைவராக குமார், செயலராக மாரிமுத்து, பொருளாளராக நாச்சிமுத்து, அக்கமநாயக்கன்புதூர் அமைப்பாளராக முருகேசன், கோயில் அம்மாபட்டி தலைவராக மருதமுத்து, செயலாளராக மாரிமுத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில் மாநில தலைவர் ஜாபர், மாநில பொருளாளர் ஜாபர் சாதிக், கொள்கை பரப்பு செயலாளர் கிரிராஜா, நகர நிர்வாக குழு மீராமைதீன், இஸ்மாயில் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.